சொல்வதெல்லாம் புரிவதில்லை;
புரிவதெல்லாம் சொல்ல முடிவதில்லை!

வார்த்தைகள் கோடி இருப்பினும்
விளங்கும்படி உரைக்க
போதவில்லை!

 

உள்ளதை உள்ளபடி
தெரிவித்துவிட
மனதிற்கொரு
மாயக் கண்ணாடி
கண்டுபிடிக்க வக்கற்ற
கூகுளும் ஆப்பிளும்
அழுகித் தொலையட்டும்!

Related Articles

Leave a Comment