ந் நூல் திருத்திப் பதிப்பித்த இரண்டாம் பதிப்பாக 1928-இல் வெளிவந்திருக்கிறது. சற்றொப்ப நூறு ஆண்டுகளுக்குமுன் வெளியான நூல். அதற்கேற்ப அக்கால மொழி நடை; வார்த்தைகள். பிறகு 1939-இல் மூன்றாம் பதிப்பாக வெளியிடும் முயற்சியில் தம் பிரதியில் சில திருத்தங்களும் சேர்க்கைகளும் செய்திருக்கிறார் ஆசிரியர் பா. தா. அந்த மூன்றாம் பதிப்பு வெளிவந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் இந்நூல் வெளியான காலத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்திருக்கிறது என்பதைப் பீடிகையின் முதல் பக்கத்தில் அடுத்த பதிப்பிற்காக பாட்டனார் பா. தா. சேர்த்துள்ள அடிக்குறிப்பில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. அது பீடிகை – பகுதி 1-இல் கட்டம் கட்டப்பட்டுள்ளது.

இந்நூலை இங்கு பதிவேற்றும்போது சில ஒப்பனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • மூன்றாம் பதிப்பிற்காகக் குறிப்பிடப்பட்டிருந்த திருத்தங்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
  • நீண்ட நெடிய பத்தி, சிறு பத்திகளாகவும் நீண்ட நெடிய அத்தியாயங்கள், சிறு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
  • அக்காலத்தில் அவர்கள் முறைப்படி எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் சமகால வாசகர்கள் வாசிப்பதற்கு ஏதுவாக உடைத்தோ / சேர்த்தோ மாற்றப்பட்டுள்ளன. ஆனால் எவ்விதத்திலும் பொருள் மாறுபாடு இராது. உதாரணத்திற்கு, ‘மொழிபெயர்த் துள்ளேன்’ என்ற வார்த்தை ‘மொழி பெயர்த்துள்ளேன்’ என்று மாறியிருக்கும்.

இந்நூலின் நவீன மாற்றம் அவ்வளவே! மற்றபடி இந்நூல் ஏன், எதற்கு, எப்படி என்பதை பீடிகை உணர்த்தும்.

அன்புடன்,
-நூருத்தீன்

நவம்பர் 20, 2014

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

Related Articles

Leave a Comment