N.B. அப்துல் ஜப்பார்
N.B. அப்துல் ஜப்பார்
பா. தாவூத்ஷா மைமூன்பீ தம்பதியருக்கு, 1919ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் தேதி நாச்சியார்கோவிலில் பிறந்தவர் N.B. அப்துல் ஜப்பார். 1941 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. மாணவராக இருந்தபோதும், அதற்குமுன் கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்ற காலத்திலேயும் தமிழ்மொழிப் புலமைக்கான பரிசுகளைப் பெற்றார். பள்ளி மாணவப் பருவத்திலேயே 'தாருல் இஸ்லாம்' இதழில் எழுதத் தொடங்கினார். 1940 இல் ஒரு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார்.
'என்.பி.ஏ.' என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த அவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், துணிச்சலான பத்திரிகை ஆசிரியர், நூல் ஆசிரியர், பதிப்பாசிரியர், விமர்சகர் என்ற பல சிறப்புகளுக்குரியவராகத் திகழ்ந்தார். தம் தந்தையாரின் 'தாருல் இஸ்லாம்' மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் ஏராளமாக எழுதிக் குவித்தவர், என்.பி.ஏ. தந்தையாருடன் திருக்குர்ஆன் விரிவுரை எழுதி வெளியிடும் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றையும் சிறப்பாக எழுதி வெளியிட்டார்.
என்.பி.ஏ. அவர்களின் இலக்கிய சாதனைக்குச் சிகரமாக அமைந்தது மிகப் பெரும் சரித்திர நாவலான ஷஜருத்தூர். ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய ஷஜருத்தூர் இஸ்லாமியத் தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது. தந்தையார் பா.தாவூத்ஷா வழியில் இதழியல், பதிப்பியல் பணியில் இறுதிவரை ஈடுபட்டிருந்தார் என்.பி.ஏ.
1995ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி தமது 76ஆவது வயதில் சென்னையில் மரணமடைந்தார்.
மேலும் அறிய கீழுள்ள சுட்டிகளை க்ளிக்கவும்
N.B. அப்துல் ஜப்பார் எழுதிய: