நூருத்தீன்
நூருத்தீன்
N.B. அப்துல் ஜப்பார், பல்கீஸ்பீ தம்பதியருக்கு, 1965ஆம் ஆண்டு பிறந்தவர் நூருத்தீன் அஹ்மத். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் கணினி மென்பொருள் துறையில் பட்டச் சான்றிதழும் பெற்று, அமெரிக்காவிலுள்ள ஸியாட்டில் நகரில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார்.
ஆனந்த விகடன், முஸ்லிம் முரசு, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியதில் இவரது எழுத்தார்வம் துவங்கியது. சத்தியமார்க்கம்.காம் எனும் இணைய இதழில் சஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றை ‘தோழர்கள்’, ‘தோழியர்’ எனும் தலைப்புகளில் தொடராக எழுதியிருக்கிறார். இந்நேரம்.காம் எனும் தமிழ் இணையச் செய்தித் தளத்தில் ‘மனம் மகிழுங்கள்’ என்ற உளவியல் தொடர் வெளியானது. அவையனைத்தும் வாசகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தொடர்ந்து விகடன், தினகரன், குங்குமம், சமரசம், அல்-ஹனாத், புதிய விடியல் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் இணைய இதழ்களில் எழுதி வருகிறார்.
‘தோழர்கள்’, தோழியர், மனம் மகிழுங்கள். ஞான முகில்கள் - இமாம் அபூஹனீஃபா (ரஹ்) வரலாறு, மொழிமின், யார் இந்த தேவதை? ஆகிய பல நூல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் அறிய கீழுள்ள சுட்டிகளை க்ளிக்கவும்
நூருத்தீன் எழுதிய: